Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஜுலை 21, 2019 02:45

கும்பகோணம்: கும்பகோணத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக பள்ளி செல்வோம் என்ற தேசிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கும்பகோணத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் பள்ளி செல்வோம் என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தை தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம் முன்னெடுத்துள்ளது. நாட்டின் பல நகரங்கள், கிராமங்களில் இப்பிரச்சாரத்தை இந்த அமைப்பு மேற்கொண்டு சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

அதன்படி  பழைய மீன் மார்க்கெட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ- மாணவிகளுக்கு புத்தக பைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  நகராட்சி ஆணையர்  ஜெகதீசன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்